உனக்கும் எனக்கும் உலகம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் உதயம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் வான்ம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் இனங்கள் மட்டும் வேறே!
விதைகள் கொண்ட மரங்கள், விழிகள் அறியுமோ ?
விதிகள் போடும் தடங்கள், விந்தையில் முடியுமோ ?
இனி ஓர் உலகம் செய்ய நம்மால் இயலுமோ ?
இருப்பதை காத்து நடந்தால், இன்பம் தொடருமோ ... !
மடிந்த பூக்கள் மாலை ஆகிறதே ...
இறந்த மனிதனின் மார்பில் சாய்கிறதே ...
மண்ணுக்குள் போகும் முன்னே , மனிதனை நேசிக்க கல் ...
மண்ணுக்குள் போன பின்னே, உன் ஆசையை பூசித்துக்கொள் ...
மொழிகள் உண்டு நூறு , கற்றுக்கொள்ளவே !
மதங்கள் உண்டு கோடி, மாறிக்கொள்ளவே !
தெருவுக்கொரு தெய்வம் உண்டு, வேண்டிக்கொள்ளவே !
உயிர் ஒன்று மட்டும் தானே உண்டு, நீவாழ்ந்துக்காட்டவே !
உனக்கும் வேண்டும் போர்நிறுத்தம்,
எனக்கும் வேண்டும் போர்ந்றுத்த்ம்,
இருவருக்குமின்றி மன வருத்தம்,
மதிக்கொண்டு செய்வோம் விதித்திருத்தம் ..
-- கண்ணன்.ச
Monday, December 28, 2009
தந்தையாக நான் !!! (யாவும்கற்பனையே)
காதல் என்னும் வினாக்களுக்கு
காதலி என்னும் விடைத்தாளில்
கவிதையாய் வடித்த விடைக்கு
நான் பெற்ற மதி(ப்)பெண் நீ ......!
தொட்டிலில் நீ, கட்டிலில் உன் தாய்,
இருவரும் எனக்கு ஒன்றுதான்,
பூமிக்கு சந்திரன் சூரியன் போல..
உன் முகப்பு பகுதி என் போல,
மற்ற தொகுதிகள் உன் தாய் போல..
என் தாய்க்கு அடுத்து நான் தீண்டியதோ
உன் தாயை,
அதற்க்கடுத்து சீண்டுவதோ
என் சேயை.
மடியில் நீயும் மாணிக்கமாய்,
மலரில் ஊறும் தேன் சொர்க்கமாய்,
சிரித்தாய் இதழ் விலக,
சிலிர்த்தேன் உடல் உருக..!
உன்னிடம் எனக்கு ஓர் வேண்டுகோள்,
என்றும் உடலை கவனித்துக்கொள்,
ஏனெனில்,
இறுதிவரை உன்னுடன் வரப்போகும்சொந்தம் உன் உடல் மட்டுமே !
உன் தாயை காதலித்தேன்
நீ கிடைத்தாய்....
உன்னை காதலிக்கிறேன்
எனக்கு தாயாக கிடைப்பாயா?
-- கண்ணன்.ச
Subscribe to:
Posts (Atom)
