உனக்கும் எனக்கும் உலகம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் உதயம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் வான்ம் ஒன்றே !
உனக்கும் எனக்கும் இனங்கள் மட்டும் வேறே!
விதைகள் கொண்ட மரங்கள், விழிகள் அறியுமோ ?
விதிகள் போடும் தடங்கள், விந்தையில் முடியுமோ ?
இனி ஓர் உலகம் செய்ய நம்மால் இயலுமோ ?
இருப்பதை காத்து நடந்தால், இன்பம் தொடருமோ ... !
மடிந்த பூக்கள் மாலை ஆகிறதே ...
இறந்த மனிதனின் மார்பில் சாய்கிறதே ...
மண்ணுக்குள் போகும் முன்னே , மனிதனை நேசிக்க கல் ...
மண்ணுக்குள் போன பின்னே, உன் ஆசையை பூசித்துக்கொள் ...
மொழிகள் உண்டு நூறு , கற்றுக்கொள்ளவே !
மதங்கள் உண்டு கோடி, மாறிக்கொள்ளவே !
தெருவுக்கொரு தெய்வம் உண்டு, வேண்டிக்கொள்ளவே !
உயிர் ஒன்று மட்டும் தானே உண்டு, நீவாழ்ந்துக்காட்டவே !
உனக்கும் வேண்டும் போர்நிறுத்தம்,
எனக்கும் வேண்டும் போர்ந்றுத்த்ம்,
இருவருக்குமின்றி மன வருத்தம்,
மதிக்கொண்டு செய்வோம் விதித்திருத்தம் ..
-- கண்ணன்.ச
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment