காதல் என்னும் வினாக்களுக்கு
காதலி என்னும் விடைத்தாளில்
கவிதையாய் வடித்த விடைக்கு
நான் பெற்ற மதி(ப்)பெண் நீ ......!
தொட்டிலில் நீ, கட்டிலில் உன் தாய்,
இருவரும் எனக்கு ஒன்றுதான்,
பூமிக்கு சந்திரன் சூரியன் போல..
உன் முகப்பு பகுதி என் போல,
மற்ற தொகுதிகள் உன் தாய் போல..
என் தாய்க்கு அடுத்து நான் தீண்டியதோ
உன் தாயை,
அதற்க்கடுத்து சீண்டுவதோ
என் சேயை.
மடியில் நீயும் மாணிக்கமாய்,
மலரில் ஊறும் தேன் சொர்க்கமாய்,
சிரித்தாய் இதழ் விலக,
சிலிர்த்தேன் உடல் உருக..!
உன்னிடம் எனக்கு ஓர் வேண்டுகோள்,
என்றும் உடலை கவனித்துக்கொள்,
ஏனெனில்,
இறுதிவரை உன்னுடன் வரப்போகும்சொந்தம் உன் உடல் மட்டுமே !
உன் தாயை காதலித்தேன்
நீ கிடைத்தாய்....
உன்னை காதலிக்கிறேன்
எனக்கு தாயாக கிடைப்பாயா?
-- கண்ணன்.ச

No comments:
Post a Comment